Ads Header

Pages


12 March 2012

ரஜினி - கேவி ஆனந்த் படம் கையழுத்தானது?


கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, கேவி ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிப்பது குறித்துதான்.

இந்த செய்தியை தயாரிப்பாளர், இயக்குநர், ரஜினி என யாருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அதற்குள் மேலும் ஒரு தகவல்.

'ரஜினி - கேவி ஆனந்த் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. கேவி ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் 'சுபா', படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளில் தீவிரமாக உள்ளார்கள்' என்பதுதான்.

இந்தப் படத்துக்கு பெயர் கூட முடிவாகிவிட்டதாம். முன்பு தள்ளி வைக்கப்பட்ட சரித்திரப்படமான அதே ராணாதான் தலைப்பு. ஆனால் இது சரித்திரக் கதை அல்ல. அதிரடி ஆக்ஷன்- பொழுதுபோக்குப் படமாம்.

இப்போதும் இந்த செய்திகளை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய சமாச்சாரம், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நிலைமை. ஏற்கெனவே ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் பூஜை போடப்பட்டு, விளம்பரமும் கொடுத்த நிலையில் கைவிடப்பட்டது. வாசு இயக்கத்தில் சந்திரமுகி வந்தது.

இப்போது ராணா!

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner